Tuesday, January 27, 2009

காதலர் தினம்!!

காதல் உள்ளங்களுக்கு எனது காதலர் தின வாழ்த்துகள்.
எப்போதோ கிறுக்கியதை இன்று உங்கள் பார்வைக்காக........
எல்லா இடங்களிலும் களை கட்டிவிட்டது காதலர் தின கொண்டாட்டங்கள்.வாழ்த்து அட்டைகள் என்ன!! அன்பளிப்புகள் என்ன!! அப்பப்பா.....என்னமாய் அசத்துறாங்க.

வழக்கம் போலவே எனக்கு அட்டையும் இல்லை....அன்பளிப்பும் இல்லை.
எப்படித் தான் நான் குப்புறப்படுத்து கண்ணை மூடி கஷ்டப்பட்டு கலராய் கனவுகள் பல கண்டாலும் கண்ட கனவுகளில் "தாவணிக்கனவுகள்" மட்டும் பலித்ததேயில்லை...... (எனக்கு கன்னிராசி இல்லையோ...)
எனக்கு மட்டும் இப்படியெல்லாமேன்??..சரி சரி..அதவிடுங்க.

ஒரு காலத்தில் பயந்து பயந்து "லைன்" விட்ட நம்மாளுங்க காதல் கூட சற்றே (முழுமையாக இல்லாவிட்டாலும்) வாழ்த்து மடல் கொடுக்குமளவிற்கு பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.
அதிலும் , ஒரு சிலரின் "பரிணாம வளர்ச்சி" ச்சும்மா "அதிருதில்ல " ரகம்.
பரவாயில்ல அவங்களாவது.....):) ஜமாய்க்கட்டும்....

என்ன!! ஒவ்வொரு காதலின் வெற்றிக்குப் பின்னாலும் பல காதல்களின் தோல்வி தலையை தொங்கப்போட்டு நிற்பது தான் தவிர்க்கமுடியா வேதனை.
என்ன செய்வது???எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை என்று மனதை தேற்ற வேண்டியது தான். take it easy...
"காதலர் தினம்" என்பதே காதலுக்கு மரியாதை செய்யும் நாள் என்பதையும் தாண்டிய ஒரு வணிக நோக்கான நாள் என்பது தான் என் எண்ணம். உண்மையும் அதுவே!!
அதற்காக ஐயோ!! எங்கே எமது கலாச்சாரம்.... புண்ணாக்கு..அது..இது.... என்று வெற்று கூச்சல் போடுவதிலும் எனக்கு துளியும் உடன்பாடில்லை.பெப்.14 லிலோ அல்லது கன்றாவி எப்பவாச்சுமே கொண்டாடிற்றுப் போறாங்க......விடுங்கப்பா........

இன்னொரு முக்கியமான சேதி....எல்லோரும் காதல் பண்றாங்களே..... நாம கூட பண்ணினா என்னான்னு மட்டும் காதல பண்ணாதிங்க.....அப்புறம் "time pass"க்கு பண்ணி வாழ்க்கையில் நல்ல " time"மே போச்சுன்னு சும்மா புலம்பவும் கூடாது.

இது எங்கேயோ படித்ததில் பிடித்தது.

love...
"Love is not about finding the right person, but creating a right relationship. It's not about how much love you have in the beginning but how much love you build till the end.

அடடா!!அப்படிப்போடு .......
என்ன அழகாக காதல் எனும் உறவை மிக எளிதாக புரிய வைக்கும் ஒரு சொல்லாடல்.
இதெல்லாம் புரிந்தா love பண்றாங்க???
காதல்
என்னில் -நான்
காணும்
கடவுள்.


காலச்சக்கரத்தின்
சுழற்சியில்
முகவரிகள் மட்டுமல்ல...
முகங்கள் கூடமாறினோம்...
என் முகவரி தேடி - தொலைத்த
உன் முகவரி
இன்னொருவன் கையில்..
ஆனாலும்
சொல்லாத
என் காதல் மட்டும்
அதே இளமையுடன்...
என் கையில்.
சு.பாரதி (2008)


இதுதான் காதல்
காதல்!!
இதயங்களின் சூட்டில்
கருவாகும்
ராகம்.
காதல்!!
பருவ உணர்வுகளின்
தாளம்.
காதல்!!
பொய்யில் புனையும்
உண்மை.
காதல்!!
நீயும் நானும்
நாமாகும்
மாயக்கண்ணாடி.
ஆக மொத்தம்....
காதல்!!
கனவுலகின்
மயன்.

சு.பாரதி (2001)


என் காதலி வருகிறாள்
கருக்கட்டிய
மேகமூட்டத்தின் குளிர்ச்சி
என் இதயத்தில்....
மரங்களற்ற சாலைகள்
இன்று
பூத்துக்குளுங்கும்
நந்தவனச் சோலையாக!!!
சுழற்றியடிக்கும் காற்று - கூட
வருடும் தென்றலாக!!!
என்ன மாயமோ....
நான் கூட அழகாக - மிக
அழகாக...
தூரத்தே வருகிறாள்
என் காதலி.
சு.பாரதி (2001)


பி.கு:-என்னடா!! இந்தளவு உளறுகிறானே......இவனுக்கு அனுபவமா??? அடப்பாவமே!! என்றெல்லாம் "உச்" கொட்டாம வேலையை பாருங்கப்பு.

hydroxycut recall