Wednesday, April 8, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே.....

"மாற்றம் வரும் நாளை ..."என்ற என் எண்ணம் மட்டும் தான் மாறாதிருக்கிறது ஈழப்பிரச்சனையை பொறுத்தவரை. எம் மக்கள் தொடர்பான செய்திகள் எல்லாமே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலவே வெளியாகின்றன. மனிதநேயம், மனிதாபிமானம் என்பன எல்லாமே சர்வதேச பிராந்திய நலன்கள் முன்னால் வெற்று வார்த்தைகள் தாம் போலும்.

புலத்திலே தொடரும் அமைதிவழி தொடர் போராட்டம் ஒன்றெ எமக்கான இறுதி நம்பிக்கை.......எமக்கான தீர்வை பெற்றுத் தர சர்வதேச நாடுகளை நிர்ப்பந்திப்பதே எம்முன்னால் உள்ள சாத்தியமான தெரிவும் கூட.
சர்வதேசம் கூட "ஏதோ" ஒரு முடிவை எடுத்துகொண்டுதான் வாளாதிருக்கிறதோ???

இந்நேரத்தில் கூட நம்மிடையே ஒருசிலர் பழைய குப்பைகளை கிளறி கும்மியடிப்பது தத்தம் "இருப்பை" நிலைநிறுத்தவன்றி வேறெதற்கு??
எதையெடுத்தாலும் புலிஆதரவு, புலியெதிர்ப்பு என கபடியாடுவதே ஒரு சிலருக்கு வேலையாகி போய்விட்டது.
இவர்கள் எல்லோரும் எதையெடுத்தாலும் மாக்சிசம், ஜன நாயகம் என அள்ளிவிடுவாங்க... ஆஹா...கேட்க சுவாரசியமாக இருக்கிறதே என்று கொஞ்சம் சீரியசாக ஏதாவது "வேலைத்திட்டம் " இருக்கா எனக் கேட்டால் மோவாயை சொறிவாங்க.
ஏதாவது "இருந்தால்" தானே சொல்ல........ நான் பதிவு போட்டு கொல்ற மாதிரி இவங்கள் பேசியே உயிர வாங்குற வகையறாக்கள்.

அப்புறம் நம்ம சினிமா பக்கம் சீரியஸாக பார்த்தால்..........
எம்மக்களின் அவலத்தின் பேரால் தொடரும் தமிழக அரசியல் கூத்துகள் அசிங்கமான காட்சிகள்.
அரசியல் "வியாபாரிங்க " எல்லோருமே நிர்வாணமாக..>>தூ..
நம்ம தொப்புள்கொடி தலைவருங்க தேர்தல் வரும் போது ஓட்டுக்காக ஒட்டுறதும் மத்தபடி வெட்டிவிடுறதுமுன்னு அவங்க தொல்லையே தனியான ஒரு எபிசோடு, ஆதலால் தமிழக மக்களே நீங்கள் விழிப்பாகவிருந்து உணர்வுகள் மரக்காத மக்கள் தாம் மாந்தைகள் அல்லர் என உங்கள் தலைவலிகளுக்கு... மன்னிக்கவும் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள்.
இல்லை... தேர்தல் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு உள்ள "கோவணத்தையும்" இழந்திடாதீங்க.

உறக்கமில்லா இரவுகள்
நீளுகின்றன......
அப்பிகிடக்கும்
இருட்டுப் போலவே
விம்மி வெடிக்கும் - என்
மனமும்
உறவுகளின் கதறல்
நாரசமாய்.........
உணர்வுகளின் உஸ்ணமோ
பெருமூச்சாக....
எத்தனை விதமான
கனவுகள்
அத்தனையும்
பொய்யானதோ..?
அவலச்சாவொன்று - தான்
நிஜமானதோ..?
விடை காணாத
வினாக்களுக்குள் - எந்தன்
குமுறல்கள்
புதைகின்றன.
ஆசையுடன் அசைபோட்ட
ஞாபகப்பதிவுகளே
முட்களாக........
விழி ததும்பும் கண்ணீரில்
நினைவுகளைக்
கரைக்கின்றேன்!!
சு.பாரதி.




















hydroxycut recall