Thursday, February 5, 2009

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்....

உணர்வுகளின் முன்னே "புறச்சூழல் தாக்கம்" வீரியமிழந்து நிற்கும் என்பது நேற்று மாலை (Feb.4) டொரண்டோ நகரில் கனேடியத்தமிழர்களால் நடாத்தப்பட்ட, இலங்கையரசின் இனஅழிப்பு போரை நிறுத்தக்கோரும் "மெழுகுதிரி" போராட்டம் எடுத்துக்காட்டி நின்றது.

கடந்த ஒரு மாதகாலமாகவே தாயகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் என்னைப்போன்ற சாதாரன தமிழக, புலம்பெயர் உறவுகளுக்கு மிகமோசமான மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது எல்லோராலும் உணரக்கூடியதே.

சர்வதேச நாடுகளின் பாராமுகம்(?) அந்தந்த நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தினால் சற்று நம்மை நோக்கி "ஏதோ" அசையும் தன்மைக்காவது இட்டுச்சென்றுள்ளது. ஆனாலும் உடனடி மாற்றங்கள் எங்கள் அவசர தேவையாயினும் அவை நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. (இல்லை என்பதே கசப்பான உண்மை)...உடனடியாக எதிர்பார்ப்பதும் ஏமாற்றத்தினை விதைத்து நம்மை சலிப்புற செய்யும். 'அடிக்க அடிக்க தானே அம்மியே நகர்கிறது'...ஆதலால் ஏனைய சமூகங்களினை "வெறுப்பேற்றாது" தொடர்ந்தும் ஆரோக்கியமான முறையில் நம் போராட்டத்தினை மேற்கொள்வோம். நிச்சயம் காலம் நல்ல பதிலையே தரும் நம்புவோம்.
என்றோ இவ்வாறு தொடங்கியிருக்க வேண்டிய எம் "மக்கள்" போராட்டம் சற்று காலம் தாழ்த்தியேனும்....இப்போதாவது தெருவில் இறங்கினோமே......
இதுவே...............



திலீபன் அண்ணா அன்றுரைத்த "மக்கள் புரட்சி".


பெப்.4 அன்று மாலை...........
பகுதிநேரவேலைக்கு செல்முன் "மெழுகுதிரி"போராட்டத்தில் கலந்துவிட்டு செல்வது என்று முடிவெடுத்திருந்த்தேன். அவ்வாறே செல்லும் போது அன்றைய காலநிலை காரணமாக போராட்டத்தில் கலந்துகொள்ளப் போகும் மக்கள் எண்ணிக்கை பற்றிய சந்தேகம் கூட எனக்கிருந்தது. ஆனால் உதிரத்தை உறையச் செய்யும் அந்த மாலைக்குளிர் நிலையினையயும் பொருட்படுத்தாது எம்மவர்கள் அந்த உணர்வுப்போரட்டத்தில் கலந்திருந்தது என்னைப்பெருமிதம் கொள்ளவைத்தது . வயோதிபர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் எல்லோரும் ஒரே குரலில் அமைதி வேண்டி கோஷமிட்டனர்.
பல தடவைகள் என் கால், கைகள் விறைப்படைந்து செயலிழக்கும் போதெல்லாம் எல்லோர் போலவும் அருகிலிருந்த "plaza"க்குள் சென்று என்னை "warm up" பண்ணிக்கொண்டு கவனஈர்ப்பில் கலந்து கொண்டேன். ஏனென்றால் அன்றைய குளிர் அப்படி.
இந்தப் போராட்டம் எம்மக்களுக்கு (வன்னி மக்கள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.) உடனடி நிவாரணமளிக்காவிட்டாலும் ஏதோ எம்மால் இயன்றது...வரலாற்றுப்பக்கங்களில் இருந்து விடுபட்டுச்செல்ல நான் விரும்பவில்லை.
இந்த இணைப்பினை கிளிக்கி கவனஈர்ப்பு தொடர்பான கனேடிய ஊடக செய்தியை பாருங்கள்.
http://www.citynews.ca/news/news_31842.aspx





என்றும் அன்புடன்,
பாரதி.

hydroxycut recall